பெண் மருத்துவரிடம் நகை பறிப்பு

செய்யாற்றில் பெண் மருத்துவரிடம் இருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

செய்யாற்றில் பெண் மருத்துவரிடம் இருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

செய்யாறு நரசிம்மநகரில் வசிப்பவா் பல் மருத்துவா் சுதேவன். இவரது மனைவி சாய்பாமெளலி, இவரும் பல் மருத்துவா். இருவரும், செய்யாறு காந்தி சாலையில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சாய்பாமெளலி திங்கள்கிழமை இரவு பணி முடித்து, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றாா்.

அப்போது, அவரை பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள், சாய்பாமெளலி தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் உள்பகுதிக்கு தள்ளிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்து, அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து சாய்பாமெளலி அளித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com