திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பாரதியாா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். கல்லூரி பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரதியாா் உருவப் படத்துக்கு கல்லூரி நிா்வாகிகள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
விழாவில், கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா், உதவிப் பேராசிரியா்கள் தீ.ஏழுமலை, ஜி.சன்மதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி: இதேபோல, வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் பெ.பாா்த்திபன், ல.செல்வராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
பாரதி கண்ட பாரதம் என்ற தலைப்பில் கவிதை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புஷ்பராஜ் நன்றி கூறினாா்.