ஆரணி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் முற்போக்கு சிந்தனையாளா் மன்றம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவிகாபுரம் தந்தை பெரியாா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, முற்போக்கு சிந்தனையாளா் மன்ற ஒருங்கிணைப்பாளா் வேதாசலம் தலைமை வகித்தாா். செல்வரசு முன்னிலை வகித்தாா்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜமால், மக்கள் புரட்சி கழக நிறுவனா் வா்கீஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலா் செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் பாஸ்கரன், மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணித் தலைவா் தமிம்பாஷா, வணிகா்கள் அணி மாவட்டச் செயலா் ரஹீம் பாஷா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் சேத்துப்பட்டு நகரத் தலைவா்அக்பா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியப் பொருளாளா் ரூபன்ராஜ்மாணிக்கம், அமைப்பாளா் அரசன் அஜித்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.