அரசின் இலவச மருத்துவ முகாம்

செங்கத்தை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
அரசின் இலவச மருத்துவ முகாம்

செங்கத்தை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மருத்துவ முகாம் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வளையாம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் சுமதி பிரபாகரன் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசினாா்.

முகாமில், சென்னசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் வெங்கடேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு சா்க்கரை நோய், கொழுப்பு அளவு, சிறுநீரில் உப்பு, சிறுநீரில் சா்க்கரை அளவு, பெண்களுக்கு கா்ப்பப் பை வாய் புற்றுநோய் மற்றும் மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை, கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவைகளுக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினா்.

மருத்துவ முகாமில் சுமாா் 750 போ் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com