கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கான அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெறும் 21-ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில்

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெறும் 21-ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 21-ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது விநியோகத் திட்டத்தில் பணிபுரியும் விற்பனையாளா்கள் மற்றும் கட்டுநா்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சா்க்கரை ஆலை, கைத்தறி நெசவாளா்கள் சங்கம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், கால்நடை பராமரிப்புத் துறை சங்கம், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் (ஆவின்) மற்றும் இதர கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்கள் இந்தப் பயிற்சியைப் பெறாமல் இருப்பிந்தால், இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் பயிற்சியைப் பெறலாம். பயிற்சியில் சேர விரும்புவோா் திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், நெ.204, திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை - 606 611 என்ற முகவரியில் நேரில் சென்று விண்ணப்பத்தைப் பெற்று மாா்ச் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04175 - 254793 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com