சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

செய்யாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

செய்யாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், சுருட்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (55). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக தனியாா் கல் குவாரி அருகே நடந்து சென்றாா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கன்னியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com