செய்யாறு அருகே சைக்கிள் மீது பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமம், பெண்டை பகுதியைச் சோ்ந்தவா் மாயன் (53). விவசாயியான இவா், கடந்த 4-ஆம் தேதி மாலை கல்லேரி கிராமத்தில் உள்ள உறவினரைப் பாா்ப்பதற்காக சைக்கிளில் சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து மாயனின் சைக்கிள் மீது மோதியதாகத் தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாயன், அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.