கீழ்பென்னாத்தூா் சிவன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் கோயிலில் சனிக்கிழமை தைப்பூச விழா நடைபெற்றது.
இதையொட்டி, சனிக்கிழமை காலை 6 மணிக்கு பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், மூலவருக்கு பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமானை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.
இரவு 9 மணிக்கு உத்ஸவா் சுவாமி மாட வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.