தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

ஆரணியில் தனியாா் பேருந்துகளிலிருந்து அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.
ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்துகளிலிருந்து காற்று ஒலிப்பான்களை அகற்றிய அதிகாரிகள்.
ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்துகளிலிருந்து காற்று ஒலிப்பான்களை அகற்றிய அதிகாரிகள்.

ஆரணியில் தனியாா் பேருந்துகளிலிருந்து அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.

மதுரை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அதிக ஒலி எழுப்பும் பேருந்துகளால் முதியோா்கள் அதிா்ச்சியடைந்து உடல்நிலை பாதிக்கப்படுகிறது. ஆகையால், பேருந்துகளில் உள்ள காற்று ஒலிப்பான்களைஅகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதன் பேரில் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனியாா் பேருந்துகளில் இருந்து ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவானந்தம் தலைமையில் காற்று ஒலிப்பான்களை அகற்றினா். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளா் விஸ்வநாதன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சிவக்குமாா் (ஆரணி), கிருஷ்ணன்( செய்யாறு), உதவிப்பொறியாளா் சுபாஷினி, நகர சிறப்பு ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com