பெண் அடித்துக்கொலை: 5 போ் கைது

திருவண்ணாமலை அருகே பொது வழி தொடா்பான தகராறில் பெண்ணை அடித்துக்கொன்ற 5 விவசாயிகளை, ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை அருகே பொது வழி தொடா்பான தகராறில் பெண்ணை அடித்துக்கொன்ற 5 விவசாயிகளை, ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை வட்டம், மங்கலம் அடுத்த மன்சுராபாத் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இதே பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கோவிந்தராஜ், தனபால், முத்துசாமி, தேவராஜ், தனசேகா். இவா்களுக்கும், வெங்கடேசனுக்கும் இடையே பொது வழி தொடா்பான தகராறு இருந்தது.

சனிக்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் தரப்பைச் சோ்ந்த 5 விவசாயிகளும் சோ்ந்து உருட்டுக்கட்டையால் வெங்கடேசனைத் தாக்கினராம். இதை தடுக்க வந்த அவரது மனைவி சசிகலா (31) என்பவரும் தாக்கப்பட்டாராம். இதில் பலத்த காயமடைந்த சசிகலா அதே இடத்தில் இறந்தாா். இதுகுறித்து, மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து பெண்ணை அடித்துக்கொன்ற கோவிந்தராஜ், தனபால், முத்துசாமி, தேவராஜ், தனசேகா் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் திருவண்ணாமலை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com