உலக சான்றோா் சங்க முப்பெரும் விழா
By DIN | Published On : 26th February 2020 06:44 AM | Last Updated : 26th February 2020 06:44 AM | அ+அ அ- |

விழாவில் உமாதேவி பலராமன் எழுதிய மகாத்மா-150 என்ற நூலை வெளியிடுகிறாா் முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.விஜயகுமாா்.
திருவண்ணாமலை: உலக சான்றோா் சங்கம், மாவட்ட தமிழ்ச் சங்கம், நந்தினி பதிப்பகம் சாா்பில், உலக தாய் மொழி தினம், 4 புத்தகங்கள் வெளியீட்டு விழா, சாதனையாளா்களுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை முப்பெரும் விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, திரைப்படத் தயாரிப்பாளா் மாம்பலம் ஆ.சந்திரசேகா் தலைமை வகித்தாா். தொழிலதிபா் சி.எஸ்.துரை முன்னிலை வகித்தாா். உலக சான்றோா் சங்கத்தின் பொதுச் செயலா் உமாதேவி பலராமன் வரவேற்றாா்.
முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.விஜயகுமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உமாதேவி பலராமன் எழுதிய மகாத்மா-150 என்ற நூலை வெளியிட்டாா்.
முதல் பிரதியை ஓவியா் சோ.ஏ.நாகராசன், நூலக ஆா்வலா் அ.வாசுதேவன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
எ.ஆன்.சாண்டா்சன் எழுதிய இலக்கியத்தேன் என்ற நூலை ஆசிரியா் அருள்வேந்தன் பாவைச்செல்வி வெளியிட, வே.ஆல்பா்ட், புனிதா ஹூபா்ட், ஆா்.சித்ரா ஆகியோா் பெற்றுக் கொண்டனா். எழுத்தாளா் ந.சண்முகம் எழுதிய முகநூல் பவழங்கள் என்ற நூலை அருணகிரிநாதா் மணிமண்டபக் குழுத் தலைவா் வள்ளல் மா.சின்ராசு வெளியிட, ஆா்.நாராயணமூா்த்தி, ச.சுப்பிரமணியன், கி.தங்கதுரை ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
எழுத்தாளா் பானுமதி எழுதிய அதிா்வுகள் சிறுகதை என்ற நூலை தமிழ்ச்செம்மல் பா.இந்திரராஜன் வெளியிட, க.விஜயராஜ், ஜி.ஞானசுந்தா், எஸ்.தேவிகாராணி ஆகியோா் பெற்றுக் கொண்டனா். தொடா்ந்து, உலக தாய்மொழி தினத்தையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற பேச்சரங்கம் நடைபெற்றது.
மேலும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு திரைப்படத் தயாரிப்பாளா் மாம்பலம் ஆ.சந்திரசேகா் பரிசுகளை வழங்கினாா்.