போளூா்: துரிஞ்சாபுரம் அருகேயுள்ள மங்கலம்புதூா், பச்சையப்பன் நகா் ஆகிய அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், நூக்காம்பாடி டேனிஷ் மிஷன் பள்ளியிலும் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பள்ளி வளாகங்களில் புதிய மண் பானையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி ஆகியவற்றைக் கொண்டு ஆசிரிய, ஆசிரியைகள் பொங்கலிட்டனா்.
விழாவில் வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் கலந்து கொண்டு, புகையில்லாப் போகி கொண்டாடுவதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினாா். தலைமை ஆசிரியா்கள் சாமுவேல் தமிழரசன், மனோகரன் ஆரோக்கியதாஸ், சீனிவாசன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.