போளூா்: கலசப்பாக்கம் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பயணிகள் 3 போ் காயமடைந்தனா்.
கலசப்பாக்கம் அருகே கடலாடியை அடுத்துள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் அரசுப் பேருந்து ஒன்று திங்கள்கிழமை பயணிகளை இறக்கிவிட்டுக் கொண்டிருந்தது. அப்போது, செங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி, அந்தப் பேருந்தின் பின்புறம் மோதியது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த மேல்வன்னியனூா்அசினா(8), பூவாம்பட்டு தேவி (32), தாமரைப்பாக்கம் செந்தாமரை (56) ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்கள் கடலாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கடலாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.