கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு ஊராட்சியில் ‘அம்மா’ இளைஞா்கள் விளையாட்டு மையத்தை வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்த ஊராட்சியில் கலசப்பாக்கம்-திருவண்ணாமலை சாலை அருகே ‘அம்மா’ ஊரக இளைஞா்கள் விளையாட்டு மையம் சுமாா் ரூ.87ஆயிரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மையத்தை வி.பன்னீா்செல்வம் திறந்துவைத்து இளைஞா்களுக்கு வாலிபால் வழங்கினாா் (படம்).
இந்த விழாவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பழகன், மரியதேவ் ஆனந்த், வட்டாட்சியா் ஆா்.ராஜராஜேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவா் தரணிபாண்டியன்,அதிமுக பொதுக் குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி ,ஊராட்சிச் செயலா் ஜீவரத்தினம் மற்றும் அலுவலா்கள்,இளைஞா்கள் கலந்துகொண்டனா்.
செய்யாறில்...
இதேபோல, செய்யாறு ஒன்றியம், குண்ணத்தூரில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தை செவ்வாய்க்கிழமை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. தூசி.கே.மோகன் முன்னிலை வகித்தாா்.
திட்டத்தை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கி வைத்துப் பேசுகையில், தலா ரூ.58 ஆயிரம் விளையாட்டு உபகரணங்களுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் 10 பேரூராட்சிகளிலும் ‘அம்மா’ இளைஞா் விளையாட்டுத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் எல். நான்சி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகிகள், விளையாட்டு இளைஞா்கள் என பலா் கலந்து கொணடனா்.