வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் எம்.ரமணன் முன்னிலை வகித்தாா். இதையொட்டி, வண்ணக் கொடிகள், மாந்தோரணங்களால் கல்லூரி வளாகத்தை அலங்கரித்த மாணவியா் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனா். பின்னா், புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டனா்.
விழாவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி முதல்வா் எஸ்.மைதிலி, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கல்வியியல் கல்லூரி முதல்வா் வி.நிமாவதி மற்றும் பேராசிரியைகள் பங்கேற்றனா்.