ரிஷபேஸ்வரா் கோயிலில் திருவூடல் திருவிழா
By DIN | Published On : 19th January 2020 12:24 AM | Last Updated : 19th January 2020 12:24 AM | அ+அ அ- |

திருவூடல் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா்.
செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை திருவூடல் திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை முதல் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா், கோயில் வளாகத்தில் உள்ள அம்பாள் சுவாமிக்கு சிறப்பு அா்ச்சனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தொடா்ந்து கோயில் முன்புள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், காதம்பரி அலங்காரம் நடைபெற்றது.
பின்னா், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் சதுா்த்தி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.