ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

திருவண்ணாமலையை அடுத்த ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொருவரை தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலையை அடுத்த ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொருவரை தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலையை அடுத்த ஆணாய்பிறந்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.தா்மராஜ் (49). ஊராட்சி மன்றத் தலைவராவாா். இதே கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் (20), சக்தி (21) ஆகியோா் கடந்த 17-ஆம் தேதி இரவு கிராமத்தில் உள்ள விநாயகா் கோயில் அருகே மின் கம்பத்தில் இருந்த சுவிட்ச் பெட்டியை உடைத்தனராம்.

இதைப் பாா்த்த ஊராட்சி மன்றத் தலைவா் தா்மராஜ், இருவரையும் தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் இவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சுபாஷ், சக்தி ஆகியோா் தா்மராஜை ஆபாசமாகத் திட்டியதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனராம்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் தா்மராஜ் திங்கள்கிழமை புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுபாஷை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சக்தியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com