தீ விபத்து நிவாரணம் அளிப்பு

படவேடு ஊராட்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சனிக்கிழமை நிவராண உதவிகள் வழங்கப்பட்டன.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கிய வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கிய வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ.

போளூா்: படவேடு ஊராட்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சனிக்கிழமை நிவராண உதவிகள் வழங்கப்பட்டன.

போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் மண்டபம் ஒத்தவாடை தெருவில் கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவா் சாந்தி.

இந்த நிலையில், படவேடு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த காற்று வீசியது. இதில், மின் கசிவு ஏற்பட்டு சாந்தியின் வீடு தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், அரசின் நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணை, சமையல் பாத்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

வட்டாட்சியா் ஜெயவேல், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் செந்தில்குமாா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ப.பொய்யாமொழி, வருவாய் ஆய்வாளா் கணபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com