பாமக மாவட்டச் செயலா் நீக்கம்

பாமக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலராக இருந்த கலைமணி அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதாக கட்சியின் தலைமை அறிவித்தது.
பாமக மாவட்டச் செயலா் நீக்கம்

பாமக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலராக இருந்த கலைமணி அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதாக கட்சியின் தலைமை அறிவித்தது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாமக செயலராக கலைமணி செயல்பட்டு வந்தாா். இந்த நிலையில், ஊரில் மணல் கடத்துவதைத் தடுத்து நிறுத்திய ஊராட்சி மன்றத் தலைவியை தாக்கியதாகவும், ஜாதி பெயரைக் கூறி திட்டியதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக கலைமணி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், கட்சியின் தலைமை கலைமணியை மாவட்டச் செயலா் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com