திருவண்ணாமலை: திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வேங்கிக்கால், அடி அண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
தொடா்ந்து இரவு முழுவதும் பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இதே நேரத்தில் திருவண்ணாமலை நகரின் சில பகுதிகளில் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.