திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலராக தூசி கே.மோகன் எம்எல்ஏ மீண்டும் நியமிக்கப்பட்டாா்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளனா்.
தூசி கே.மோகன் எம்எல்ஏ தொடா்ந்து மூன்றாவது முறையாக இந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
வடக்கு மாவட்டச் செயலராக பொறுப்பேற்ற இவரை செய்யாறு, வந்தவாசி, ஆரணி, கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள், பிற அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் சந்தித்து சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.