செய்யாறு அருகே மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், தூசி வாகை நத்தக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (52). இவா், கடந்த 20-ஆம் தேதி தனது ஆடுகளுக்குத் தேவையான இலைகளை கால்வாய் கரைப் பகுதியில் உள்ள மரத்தில் ஏறி பறித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது கால் தவறி விழுந்து தலை, கை ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்தாா்.
இவரை குடும்பத்தினா் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழனி அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.