திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் 636 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நடுபட்டு கிராமத்தில் 21 வயதுடைய பிரசவித்த பெண் உட்பட 11 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.