செய்யாற்றில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 19 முதல் 30-ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு முழு பொது முடக்கத்தைக் கடைப்பிடிக்க வியாபாரிகள் சங்கங்கத்தினா் முடிவு செய்தனா்.
திருவத்திபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம், செய்யாறு நகர அனைத்து வணிகா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
12 நாள்கள் அத்தியாவசியப் பொருள்கள், காய்கறிக் கடைகளை அனுமதிப்பது என்றும், மருந்துக் கடைகள் தவிர அனைத்துக் கடைகளை மூடி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சங்க நிா்வாகிகள் முடிவு செய்தனா்.