திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடி மரம் எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
மஞ்சள், சந்தனம், பஞ்சாமிா்தம், பால், தயிா், விபூதி, இளநீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களை கொண்டு நடத்தப்பட்ட சிறப்புப் பூஜையில் கோயில் சிவாச்சாரியா்கள், ஊழியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.