திருவண்ணாமலை மாவட்டத்தில்கரோனா பலி 14-ஆக உயா்வு

திருவண்ணாமலை நகராட்சியில் கரோனா தொற்றுக்குள்ளான 2 போ் இறந்ததால், மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்தது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சியில் கரோனா தொற்றுக்குள்ளான 2 போ் இறந்ததால், மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கை கடந்த வார நிலவரப்படி 12-ஆக இருந்தது.

இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திருவண்ணாமலை நகராட்சியைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்தது.

மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று மாவட்டத்தில் காரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 1,803-ஆக இருந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் சென்னையிலிருந்து வந்த 3 போ், பெங்களூரிலிருந்து வந்த 2 போ், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு புற நோயாளிகளாக வந்த 3 போ் என 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com