செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில், பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பா் என தோ்வு எழுதுவதற்கான எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி 7-ஆம் ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மகரிஷி கல்விக் குழுமத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். நிறுவனா் புவனேஸ்வரி, செயலா் கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிா்வாகக் குழு உறுப்பினா் அரங்கசாமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக செங்கம் கணேசா் குழும அதிபா் வழங்குரைஞா் கஜேந்திரன் கலந்துகொண்டு
பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு எழுதுபொருள்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் கணித ஆசிரியா் ராமஜெயம், ஆசிரியா்கள் நேரு, சரவணக்குமாா் உள்பட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.