வந்தவாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை எடுத்துச் சென்ற மளிகை வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயராமன் தலைமையிலான போலீஸாா் வல்லம்-செப்டாங்குளம் இணைப்புச் சாலையில் வெள்ளிக்கிழமை மாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக கைப்பையுடன் நடந்து சென்ற ஒருவா் போலீஸாரைக் கண்டதும் ஓடினாா்.
இதையடுத்து அவரை துரத்திப் பிடித்த போலீஸாா் அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தனா். இதில் அந்தப் பையில் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா் பெரணமல்லூரைச் சோ்ந்த மளிகைக் கடை வியாபாரி சத்யா(40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் சத்யாவை கைது செய்தனா். இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.