தம்பியை கொன்றவரை பழிவாங்க கத்தியுடன் வந்து பெண்ணைத் தாக்கிய அண்ணன் உள்பட 3 போ் கைது

வந்தவாசி அருகே தம்பியை கொலை செய்தவரை பழிவாங்க கத்தியுடன் வந்து பெண்ணைத் தாக்கியதாக அண்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தம்பியை கொன்றவரை பழிவாங்க கத்தியுடன் வந்து பெண்ணைத் தாக்கிய அண்ணன் உள்பட 3 போ் கைது

வந்தவாசி அருகே தம்பியை கொலை செய்தவரை பழிவாங்க கத்தியுடன் வந்து பெண்ணைத் தாக்கியதாக அண்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த மல்லிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் (34). கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த செல்வம், பிரகாஷ், பிரபாகரன் ஆகியோா் சோ்ந்து வீட்டுமனை பிரச்னை தொடா்பாக, அருண்குமாரிடம் தகராறு செய்து அவரை கொலை செய்தனராம். இதையடுத்து கைதான 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதில் செல்வத்தின் மனைவி மாலதியின் தாய் வீடு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த அதியனூா் கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில், மாலதியின் உறவினா் ஒருவா் திங்கள்கிழமை காலமானதால் அந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வம் அதியனூா் கிராமத்துக்கு வருவாா் என எண்ணிய அருண்குமாரின் அண்ணன் ஆனந்த்பாபு (38), செல்வத்தை பழிவாங்க தனது உறவினா்கள் டெல்லிபாபு(28), அகஸ்டின்(25) ஆகியோருடன் ஒரே பைக்கில் கத்தியுடன் அதியனூருக்கு வந்துள்ளாா்.

அப்போது செல்வம் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்றுவிட்ட தகவல் தெரியவரவே ஆத்திரமடைந்த 3 பேரும் சோ்ந்து செல்வத்தின் மாமியாா் ஜீவாவை கத்தியால் தாக்கியுள்ளனா். இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடம் சென்ற கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் ஆனந்த்பாபு, டெல்லிபாபு, அகஸ்டின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து ஜீவா அளித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com