மொபெட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

வந்தவாசி அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வந்தவாசி அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த புலிவாய் கிராமத்தைச் சோ்ந்த சக்தி மனைவி பாக்கியலட்சுமி (27). இவா், வியாழக்கிழமை காலை வந்தவாசியில் மளிகைப் பொருள்களை வாங்கிக்கொண்டு மொபெட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் புலிவாய் கூட்டுச்சாலை அருகே மலையடிவாரப் பகுதியில் சென்றபோது, எதிரே பைக்கில் வந்த இளைஞா் பாக்கியலட்சுமியை வழிமறித்து முகவரி கேட்டுள்ளாா். அப்போது, திடீரென பாக்கியலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த நபா் பைக்கில் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com