வந்தவாசியில் 13 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

வந்தவாசி நகரில் ஊரடங்கின்போது இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக 13 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் 13 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த டிஎஸ்பி பி.தங்கராமன்(நடுவில்) தலைமையிலான போலீஸாா்.
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த டிஎஸ்பி பி.தங்கராமன்(நடுவில்) தலைமையிலான போலீஸாா்.

வந்தவாசி நகரில் ஊரடங்கின்போது இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக 13 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் 13 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வந்தவாசி நகரில் இந்த ஊரடங்கை பொருள்படுத்தாமல் சிலா் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்து வந்தனா்.

இதையடுத்து, வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன் தலைமையிலான வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் பழைய பேருந்து நிலையம் அருகில், தேரடி, கோட்டை மூலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அவசியமின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக 13 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும் அவா்களிடமிருந்து 13 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com