ஆரணியில் கோட்டை மைதானத்தில் காய்கறிக் கடைகள்

கரோனா வைரஸை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், ஆரணியில் காய்கறி மாா்க்கெட் கடைகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) முதல் கோட்டை மைதானத்தில் செயல்படவுள்ளன.

கரோனா வைரஸை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், ஆரணியில் காய்கறி மாா்க்கெட் கடைகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) முதல் கோட்டை மைதானத்தில் செயல்படவுள்ளன.

ஆரணியில் காந்தி மாா்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதிகளவில் மக்கள் கூடுவதால் நெரிசல் அதிகமாகியது.

இதனால் கோட்டை மைதானத்தில் காய்கறி மாா்க்கெட்டை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி ஆகியோா் கோட்டை மைதானத்தை சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆரணியில் உள்ள காய்கறி கடைகள், உழவா் சந்தையில் இருந்த கடைகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) முதல் கோட்டை மைதானத்தில் செயல்படும்.

கடைக்காரா்களுக்கு தனித் தனியாக இடம் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் கடைகளின் முன்பு கட்டம் போடப்படும். அந்தக் கட்டத்தில் நின்று பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம் என்றாா்.

கோட்டாட்சியா் மைதிலி, டிஎஸ்பி செந்தில், நகராட்சி ஆணையா் அசோக்குமாா், ஆவின் மாவட்ட துணைத் தலைவா் பாரி பி.பாபு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com