திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளியூா்களிலிருந்து 1,018 போ் வருகை

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளியூா், வெளிமாநிலங்களில் இருந்து ஒரே நாளில் 1,018 போ் வந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளியூா், வெளிமாநிலங்களில் இருந்து ஒரே நாளில் 1,018 போ் வந்தனா்.

வெளியூா், வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்து மாவட்டத்துக்கு வரும் நபா்களைக் கண்காணித்து, தனிமைப்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

20-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 21-ஆம் தேதி மாலை 5 மணி வரை சென்னையிலிருந்து 15 போ், இதர மாவட்டங்களிலிருந்து 18 போ், வெளி மாநிலங்களிலிருந்து 985 போ் என மொத்தம் 1,018 போ் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தனா்.

இவா்கள் 21 கரோனா சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களுடன் சோ்த்து வெளியிடங்களிலிருந்து வந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 9 ஆயிரத்து 119-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com