திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியானாா்.
செங்கத்திலிருந்து சிமென்ட் கல்களை ஏற்றிக் கொண்டு டிராக்டா் ஒன்று வெள்ளிக்கிழமை புதுப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில், கூலித் தொழிலாளியான ஆலபுத்தூரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் பிரபு (29) அமா்ந்து வந்தாா்.
புதுப்பட்டு கிராமத்தில் சென்றபோது, டிராக்டரிலிருந்து நிலைதடுமாறி பிரபு கீழே விழுந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே பலியானாா். செங்கம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.