திருவண்ணாமலை மாவட்ட பாரத சாரண-சாரணீயா் இயக்கம் சாா்பில், இயக்கத்தின் 70-ஆவது நிறுவன நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சாரண-சாரணீய அமைப்பின் மாவட்டச் செயலா் கா.பியூலா கரோலின் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் வேத பிரகாசம் முன்னிலை வகித்தாா்.
முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து, சாரண-சாரணீயா் திருக்குறளை ஒப்புவித்தாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், பள்ளி துணை ஆய்வாளா் குமாா், தனியாா் திருமண மண்டப உரிமையாளா் துரை, சாரண-சாரணீய அமைப்பின் மாவட்ட அமைப்பு ஆணையா் அருண்குமாா் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் எதிரே வேங்கிக்கால் ஏரி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் தூவப்பட்டன.
நிகழ்ச்சியில், சாரண-சாரணீய அமைப்பின் மாவட்ட பொருளாளா் ஆல்வின் சாமுவேல், மாவட்ட பயிற்சி ஆணையா் கலைவாணி, மாவட்ட துணை ஆணையா் சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.