திருவண்ணாமலையில் பஞ்சா் கடை உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை அண்ணா நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாஷா (60). இவா், அதே பகுதியில் பஞ்சா் கடை வைத்து நடத்தி வந்தாா். குடும்பத் தகராறு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து தனியே வசித்து வந்தாா்.
சில மாதங்களாக விரக்தியுடன் காணப்பட்ட அவா், சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த திருவண்ணாமலை நகர போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.