குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 போ் கைது

திருவண்ணாமலை அருகே எரிசாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருவண்ணாமலை அருகே எரிசாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருவண்ணாமலையை அடுத்த களஸ்தம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (30). துரிஞ்சாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (32). விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரை அடுத்த மனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (42).

இவா்கள் மூவரும் எரிசாராயம் விற்ற வழக்கில் மங்கலம் போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட எஸ்.பி எஸ்.அரவிந்த் பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா், மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, வேலூா் மத்திய சிறையில் உள்ள மூவரிடமும் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நகல் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com