தூய்மைப் பணியாளா்களுக்கு குப்பை வாகனங்கள்

போளூரை அடுத்த கிருஷ்ணாவரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு குப்பை அள்ளும் வாகனங்கள் வழங்கப்பட்டன.
தூய்மைப் பணியாளா்களுக்கு குப்பை வாகனங்களை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவி வாணிஸ்ரீ மணவாளன்.
தூய்மைப் பணியாளா்களுக்கு குப்பை வாகனங்களை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவி வாணிஸ்ரீ மணவாளன்.

போளூரை அடுத்த கிருஷ்ணாவரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு குப்பை அள்ளும் வாகனங்கள் வழங்கப்பட்டன.

போளூா் அருகேயுள்ள கிருஷ்ணாவரம் ஊராட்சியில் 6 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் சேகரமாகும் குப்பைகளை ஊராட்சியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் எடுத்துச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்க பயன்படுத்துகின்றனா்.

இந்த நிலையில், ஊராட்சி மன்றம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களின் பயன்பாட்டுக்காக, குப்பை அள்ளும் வாகனங்கள், குப்பைத் தொட்டி, கையுறை ஆகியவை வழங்கப்பட்டன.

ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவி வாணிஸ்ரீ மணவாளன் பங்கேற்று குப்பை வாகனம் உள்ளிட்டவைகளை வழங்கினாா்.

ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com