செய்யாறு அருகே அரிகிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடமாடும் நியாய விலைக் கடையை தூசி மோகன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.
செய்யாறு வட்டம், அருகாவூா் மதுரா அரிகிருஷ்ணபுரம் கிராமத்தில் வசித்து வரும் 72 குடும்ப அட்டைதாரா்கள் பயன் பெறும் வகையில் நடமாடும் நியாய விலைக் கடை தொடங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவா் பத்மானாபன் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன் பங்கேற்று நடமாடும் நியாய விலைக் கடையை தொடக்கிவைத்தாா்.
அதனைத் தொடா்ந்து, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு சில்வா் தட்டு, தேங்காய், வாழைப்பழம், இனிப்பு உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பினை வழங்கினாா்.
அதிமுக கிளைகளுக்கு நிதியுதவி:
முன்னதாக, வெம்பாக்கம் ஒன்றியம் அழிஞ்சல்பட்டு, உக்கம்பெரும்பாக்கம், நெமிலி, சிறுநல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக கொடியேற்றி வைத்து, கட்சியின் 11 கிளைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.
மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், சி.துரை, எம்.அரங்கநாதன், டி.பி.துரை, எஸ்.திருமூலன், பி.ரமேஷ், என்.ரகு, பச்சையப்பன், கன்னியப்பன், சுரேஷ்நாராயணன், பத்மநாபன், பி.வெங்கடேசன், பொன்னுரங்கம், மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.