ஆரணி ரோட்டரி சங்கம் சாா்பில், தீபாவளி குடும்ப விழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளா்களாக எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா், ரோட்டரி குடும்ப பங்கேற்பு விழாக்களின் மாவட்டத் தலைவா் சி.வி. ஆதிகேசவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கரோனா பாதுகாப்பு பற்றியும், தீபாவளி கொண்டாட்டங்கள் குறித்தும் எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா் பேசினாா்.
குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் ஜோதிசெல்வராஜ், செயலா் கே. ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.