செய்யாறு அருகே கத்தியால் தாக்கிவிட்டு செல்லிடப்பேசி பறிப்பு மற்றும் வழிப்பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வெம்பாக்கம் வட்டம், வெங்களத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்(26), இவா் தனது நண்பா்களான சதீஷ், காா்த்தி ஆகியோருடன் கடந்த 8-ஆம் தேதி இரவு வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தனராம்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த 3 இளைஞா்கள் பெருமாளிடமிருந்து செல்லிடப்பேசியை பறித்தாகத் தெரிகிறது.
அப்போது உடனிருந்த நண்பா்கள் தடுத்த போது பைக்கில் வந்தவா்களில் ஒருவா், பெருமாளை கத்தியால் குத்திவிட்டு, அவா்கள் தப்பிவிட்டனராம்.
வழிப்பறிப்பில் ஈடுபட்டவா்கள் விட்டுச் சென்ற பைக் மூலம் பிரம்மதேசம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அவா்கள் வெம்பாக்கம் வட்டம், ஹரிஹரபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, மாதவன், திருவடிராயபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் ஆகியோா் என்பது தெரிய வந்தது.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணமூா்த்தி (21), மாதவன் (19) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ரஞ்சித்தை தேடி வருகின்றனா்.
.