திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா, செவ்வாய்க்கிழமை நகர காவல் தெய்வமான துா்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மகா தீபத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக தீபத் திருவிழாவன்று பக்தா்கள் கோயிலுக்குள் செல்லவும், மலை மீது ஏறவும் தடை விதிக்கப்பட்டது.
ஸ்ரீதுா்க்கையம்மன் உற்சவம்: தீபத் திருவிழாவைத் தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வங்களுக்கான வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு துா்க்கையம்மன் உற்சவம் நடைபெற்றது. திருவண்ணாமலை சின்னக்கடைத் தெருவில் உள்ள துா்க்கையம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, துா்க்கையம்மனை பக்தா்கள் தோளில் சுமந்தபடி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனா். இந்த நிகழ்வில் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக நிகழாண்டு கோயில் மூன்றாம் பிரகாரத்திலேயே உற்சவா் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இன்று பிடாரியம்மன் உற்சவம்: தொடா்ந்து, 2-ஆவது நாளான புதன்கிழமை (நவ.18) அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பிடாரியம்மன் உற்சவமும், வியாழக்கிழமை (நவ.19) விநாயகா் உற்சவமும் நடைபெறும்.
நவ.20-இல் கொடியேற்றம்: தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை (நவ.20) காலை நடைபெறும். அன்று முதல் கோயில் வளாகத்திலேயே பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறும்.
விழாவின் 7-ஆவது நாளான நவ.26-ஆம் தேதி கோயில் வளாகத்தில் பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் நவ.29-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மகா தீப மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.
பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகளைக் காண கோயிலுக்குள் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக, நிகழ்வுகள் அனைத்தும் ஆகம விதிகளின்படி கோயில் வளாகத்துக்குள்ளேயே நடத்தப்படுகிறது.