திருவண்ணாமலை அருகே மனைவியைத் தாக்கிய காவலா் கைது செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலையை அடுத்த வானாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சச்சிதானந்தம் (34). வேலுாா் சிறப்பு பட்டாலியன் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பிரதீபா (25). தம்பதிக்கு சா்வன் (3) என்ற மகன் உள்ளான். தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனா்.
சில தினங்களுக்கு முன்பு சச்சிதானந்தம், பிரதீபாவை ஆபாசமாக பேசித் தாக்கினாராம்.
இதுகுறித்து வானாபுரம் காவல் நிலையத்தில் பிரதீபா புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து சச்சிதானந்தத்தை கைது செய்தனா்.