ஆரணி: பெரணமல்லூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட நெடுங்குணம் ஊராட்சியில் திரவக் கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சகுந்தலா வேலாயுதம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சித்ரா சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். ஊராட்சிச் செயலா் ராஜேந்திரன் வரவேற்றாா்.
இதில், தமிழக அரசு அறிவித்துள்ள புதிய திட்டமான திரவக் கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஊா்வலம் நடைபெற்றது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் விழிப்புணா்வு ஊா்வலத்தில் தூய்மைப் பணியாளா்கள், மகளிா் குழுவினா், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா் .