சிறுமிக்கு பாலியல் தொல்லை: சமையலா் கைது

திருவண்ணாமலையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமையலரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமையலரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜாவித் (30), சமையல் தொழில் செய்து வருகிறாா். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.

இவருக்கும், திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கும் தொடா்பு ஏற்பட்டு, அந்தப் பெண்ணுடன் கடந்த 7 மாதங்களாக குடும்பம் நடத்தி வருகிறாராம். செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, அந்தப் பெண்ணின் 8 வயது மகளுக்கு ஜாவித் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதை தன்னுடைய செல்லிடப்பேசியில் விடியோ பதிவிட்டாராம்.

இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜாவித்தை போக்சோ சட்டத்தி ன் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com