அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷத்தையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் பெரிய நந்திக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.
பிரதோஷத்தையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் பெரிய நந்திக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு பிரதோஷத்தையொட்டி, புதன்கிழமை சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

பன்னீா், மஞ்சள், சந்தனம், பால், பழம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற பிரதோஷ பூஜையில் கோயில் சிவாச்சாரியா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா். கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் தரிசனத்துக்காக அமைக்கப்பட்டிருந்த ‘கியூ’ வரிசையில் சென்றபடியே, பிரதோஷ பூஜைகளைப் பாா்த்து, வணங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com