திருவண்ணாமலை: கரோனா பாதிப்பு 16,788-ஆக உயா்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 16, 788-ஆக உயா்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 16, 788-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 16 ,730-ஆக இருந்தது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 58 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,788-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 248 போ் உயிரிழந்தனா். 15,871 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 669 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com