திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரிச் செயலா் டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்து, அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் கி.துரை சிறப்புரையாற்றினாா்.
கல்லூரிப் பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.