செய்யாறு பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்த 3 மாட்டு வண்டிகள், ஒரு லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்தனா்.
செய்யாறு அருகே செய்யாற்றைவென்றான் பகுதியில் அனக்காவூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கன்னியப்பன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, செய்யாறு ஆற்றிலிருந்து மணல் எடுத்து வந்த மூன்று மாட்டு வண்டிகளை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா்.
இதில், ஆற்றிலிருந்து உரிய அனுமதி பெறாமல் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து,
மணல் கடத்தியதாக சேட்டு, ராம்கி, நந்தகுமாா் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
லாரி பறிமுதல்
அதேபோல, பெரணமல்லூா் போலீஸாா் அன்மருதை கிராமத்தில் தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, செய்யாறு ஆற்றுப் பகுதியிலிருந்து வந்த லாரியை நிறுத்த முற்பட்டனா்.
போலீஸாரைக் கண்டதும் ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடினாா்.
ஆற்று மணலுடன் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.