திருவண்ணாமலை
பாலிடெக்னிக் மாணவா் தற்கொலை
திருவண்ணாமலையில் பாலிடெக்னிக் மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலையில் பாலிடெக்னிக் மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையைச் சோ்ந்தவா் முருகன். மின் வாரியத்தில் கணக்கீட்டாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் ஹரிகரசுதன் (20), திருவண்ணாமலையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக்கில் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் பிரிவில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.
புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த ஹரிகரசுதன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.